Wednesday 15 February 2017

சுண்டைக்காய் இளவரசன்

 சுண்டைக்காய் இளவரசன்


சிறார் இலக்கியம்

 பதிப்பக வெளியீடான யெஸ்.பாலபாரதியின் சுண்டைக்காய் இளவரசன் வாசித்தேன். என் பாலியகாலத்தில் அம்புலிமாமா வாசித்த உணர்வு ஏற்பட்டது. புனைவின் சாத்தியங்களை குழந்தைகளின் மனங்கவரும் வண்ணம் பழமையும் புதுமையும் இணைந்த கதை சொல்லலில் அழகாகப்பின்னியிருக்கிறார் யெஸ்.பாலபாரதி. கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அவ்வளவு விறுவிறுப்பு. கதையோட்டத்தில் வாழ்வின் விழுமியங்களை சிறார் மனதில் பதியும் வண்ணம் அழகாக நெய்திருக்கிறார். கண்கவரும் ஓவியங்களும், புத்தகத்தயாரிப்பும் மனதைக் கொள்ளை கொள்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தை சுண்டைக்காய் இளவரசன் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் யெஸ்.பாலபாரதி!
வெளியீடு - வானம் பதிப்பகம்
விலை-ரூ60/

1 comment: