Friday 17 February 2017

தானேகாவும் தங்கமலையும்

தானேகாவும் தங்கமலையும்

உலக நாடோடிக் கதைகள்
முத்து
உலகம் முழுவதிலுமுள்ள சிறார் இலக்கியம் எங்ஙனம் இருக்கிறது என்பதைச் சொல்லும் நூல்.பத்து நாடுகளைச்சேர்ந்த நாடோடிக்கதைகளை அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். தமிழின் முன்னணி ஓவியரும் எழுத்தாளருமான முத்து. ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரச்னையும் அந்தப் பிரச்னைக்கான தீர்வும் ஆர்வமூட்டும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. அநேகமாக ராஜா, ராணி, இளவரசன், இளவரசி, பூதம், சூனியக்காரி, போன்ற கதாபாத்திரங்கள் உலவுகிற கதைகள் . எளிமையான மொழியும் விறுவிறுப்பான நடையும் கையில் எடுத்தவுடன் வாசித்து முடிக்க வைக்கிறது. சுட்டி விகடனில் தொடர்ந்து வெளிவந்து குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. சிறார்கள் வாசிப்பதன் மூலம் இன்னும் விசாலமான உலகத்தை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். சிறார் இலக்கிய மொழிபெயர்ப்பு நூற்றுக்கணக்கில் நமது மொழிக்கு வரவேண்டும். அப்போது தான் நமது இலக்கியம் வளம் பெறும். ஏற்கனவே அந்த வழியில் கவிஞர் யூமாவாசுகி கோ.மா.கோ.இளங்கோ இருவரும் அளப்பரிய கொடைகளைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறா்கள்.
அந்த வரிசையில் முத்துவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் முத்து!
வெளியீடு-வானம் பதிப்பகம்
விலை-ரூ50/

1 comment: