Sunday 19 February 2017

புதையல் தீவு-கருணைத்தீவு

புதையல் தீவு-கருணைத்தீவு
தமிழில்-சுகுமாரன்


உலக செவ்வியல் கதைகளை நம்முடைய சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் காரியம் முன்பே நடந்திருக்கிறது. ஆனால் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய இளம் வாசகர்கள் வாசிக்க அவை மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட வேண்டியது அவசியம். சிறார் இலக்கியத்தின் முன்னோடியும், தமிழ்க்குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமரிசனங்களும் என்ற குறிப்பிடத்தகுந்த நூலை எழுதியவருமான எழுத்தாளர் சுகுமாரன் அவர்களின் சுருக்க மொழிபெயர்ப்பில் இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
TREASURE ISLAND - புதையல் தீவு, மற்றும் SWISS FAMILY ROBINSON- கருணைத்தீவு என்ற இரண்டும் சிறார் மொழிபெயர்ப்பு இலக்கி்யத்தில் முக்கியமான நூல்கள். சாகசமும், மர்மங்களும் தீரமும் நிறைந்த புதையல் தீவு கையில் எடுத்தவுடன் விறுவிறுப்பாக வாசிக்க வைக்கிறது. கடலும் கப்பலும் கொலையும் சேர்ந்து நாவலை சூடாக்கிவிடுகிறது.
கருணைத்தீவு
ஆள் நடமாட்டமில்லாத தீவில் கரையொதுங்கும் ராபின்சன் குடும்பம் எப்படி அங்கே இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்கிறார்கள். என்பதை சுவாரசியமாகச் சொல்கிற நாவல். காடும் காடு சார்ந்த வாழ்க்கை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் வாசிப்பு உலகத்தை விரிவுபடுத்தும் நூல்கள் இவை இரண்டும் என்பதில் ஐயமில்லை
வெளியீடு- வானம் பதிப்பகம்

No comments:

Post a Comment