Wednesday 15 February 2017

காணாமல் போன சிப்பாய்

சிறார் இலக்கியம்
காணாமல் போன சிப்பாய்
சிறார் இலக்கியக்கதையாடல்கள் பெரும்பாலும் ஒரே ஒரு ஊரிலே என்கிற பாணியில் இருக்கும். அதுவும் படர்க்கையிலேயே கதைகள் சொல்லப்படும். இதற்குள் பலவகைமைகள் உண்டு என்றாலும் முதல் முறையாக சிறார் இலக்கியக் கதையாடல் ஒரு புதிய வகைமையை எதிர்கொள்கிறது. அருகில் அமர்ந்து ஒரு குழந்தையிடம் பேசுகிற பாணியிலான கதை சொல்லும் முறை வாசிப்பவர்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. விஜயபாஸ்கர் விஜய் தன் மகளுக்குச் சொன்ன கதைகள்.
எளிமையான மொழி என்றாலும் கதைகளில் சிக்கலான பல விஷயங்களைக் கையாள்கிறார். அவர் முக்கியமான அறமதிப்பீடுகளை அதுவும் அறிவியல்பூர்வமான பகுத்தறிவு பூர்வமான நவீன உலகத்தின் மதிப்பீடுகளை அழகாக எல்லோருக்கும் புரிகிறமாதிரி சொல்கிறார். சொல்கிற கதைகளின் பன்முகத்தன்மை வாசிக்கும்போது ஒரு புதிய அநுபவத்தைக் கொடுக்கிறது. இந்த நூலை வாசிக்கும் பெற்றோர்கள் இதைப்போன்ற கதைகளை தங்கள் குழந்தைகளுக்கும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அது தான் இந்த நூலின் வெற்றி.
காணாமல் போன சிப்பாய் சிறார் இலக்கியத்துக்கு புதிய அணிகலன். விஜயபாஸ்கர் விஜய் மிக முக்கியமான வரவு. வாழ்த்துக்கள்!
வெளியீடு- வானம்
விலை ரூ50/

No comments:

Post a Comment