Thursday 2 October 2014

நானும் பூச்சியும்

உதயசங்கர்

insects

நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

என் கவிதையை ஒரு பூச்சி வாசித்துக் கொண்டிருந்தது

எச்சரித்தும் அது விடாமல் என் கவிதையை

பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது

கைகளால் தட்டி விட்டும்

வாயினால் ஊதித்தள்ளியும்

விரட்டி விட யத்தனித்தேன்

என் கவிதையில் என்ன கண்டதோ தெரியவில்லை

மீண்டும் மீண்டும் வந்து எழுத்துகளின் மீது விழுந்தது

என் கவிதை பிடிக்காமல்

திடீரென அது என்னை வந்து கடித்து விட்டால்

உடனே கைகளால் தட்டி

காலினால் மிதித்து நசுக்கி விட்டேன்

நான் நசுக்கும்போது அதுவும்

கால்களினால் என்னை நசுக்கி விட்டது

இப்போது சாகாவரம் பெற்றது என் கவிதை.

2 comments:

  1. தங்கள் கவிதைகள் சாகா வரம் பெற்றவைதான்
    தம 1

    ReplyDelete