Thursday 11 October 2012

எல்லாம் வந்தது

vulture உதயசங்கர்

 

தாந்தோன்றிப் பாதை மறைந்து

தார்ச்சாலை வந்தது

ஒரு வழிப்பாதை போய்

நால்வழிச் சாலை வந்தது

கால்நடையாய் நடந்த தூரம்

கார் கணத்தில் கடந்தது

கருத்த முகங்களில் எல்லாம்

வெண்மை நிறப்பூச்சாயிருந்தது

சினிமா பார்க்கக் காத்திருந்த காலம் போய்

வீட்டில் சினிமா காத்திருந்தது

கம்பு கேப்பை சோளம் போய்

பீட்சா பர்கர் வந்தது

உள்ளூர் பானங்கள் தொலைந்து

கோகோ பெப்சி நுரைத்தது

உலகம் எல்லாம் ஊருக்குள் வந்தது

எப்படி எப்படி எப்படியென்று

அண்ணாந்து வியந்த

ஆறுமுகத்துக்கு நடக்கும்போது

காலில் சங்கிலி ஓசை

கேட்டுக் கொண்டிருந்தது மட்டும்

ஏனென்று புரியவில்லை.Photo-0027

2 comments:

  1. சொல்லாடல்கள் இனிதே வாய்க்கின்றது.
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete