Wednesday 4 April 2012

பூனைக்குட்டி

cat
  பூனைக்குட்டி

லேவ் தால்ஸ்தோய்


ஒரு ஊரில் வாஸ்யா, காட்யா, என்ற சகோதர சகோதரிகள்ஒரு பூனை வளர்த்து
வந்தனர். வசந்த காலத்தில் அவர்களுடைய பூனை தொலைந்து போய் விட்டது.அந்த குழந்தைகள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு சமயம் அவர்கள் வீட்டிலிருந்த தானியக் களஞ்சியத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ’மியாவ்’, ’மியாவ்’ ’மியாவ்’ என்ற குட்டிச் சத்தங்கள் எங்கோ மேலிருந்து அவர்களுக்குக்கேட்டது. வாஸ்யா, உடனே ஏணி வழியாக களஞ்சியத்தின் மீது ஏறினான்.காட்யா கீழே நின்று கொண்டு“நீ அதைப் பார்த்தியா”என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஆனால் வாஸ்யா பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்துஅவன் தங்கையை கூப்பிட்டான்.
”நான் பாத்துட்டேன்..அது நம்ம பூனை தான்..குட்டிபோட்டிருக்கு..எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா..சீக்கிரம் மேல வாயேன்..” என்று சொன்னான்.உடனேகாட்யா வீட்டிற்கு ஓடினாள்.பூனைக்காக கொஞ்சம் பால் எடுத்துக் கொண்டு வந்தாள்.
அங்கே ஐந்து பூனைக்குட்டிகள் இருந்தன. அவைகள் கொஞ்சம்வளர்ந்ததும் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. அந்தக் குழந்தைகள் சாம்பலும் வெள்ளையும் கலந்தகுட்டியை வீட்டிற்குக் கொண்டு வந்தனர்.அவர்களுடைய அம்மா மற்ற குட்டிகளை கொடுத்து விட்டாள்.சாம்பல்குட்டியை மட்டும் குழந்தைகள் வளர்க்கட்டும் என்று விட்டு விட்டாள். குழந்தைகள் அதற்குஉணவு கொடுத்தனர்.அதோடு விளையாடினர். தூங்கப் போகும் போது தங்கள் படுக்கையிலேயே படுக்கவைத்துக் கொண்டனர்.
     ஒரு நாள் அந்த குழந்தைகள் சாலையோரமாக பூனைக்குட்டியோடுவிளையாடப் போனார்கள். சாலையெங்கும் வைக்கோல் காற்றில் பறந்து சிதறிக் கிடந்தது. பூனைக்குட்டிவிளையாடுவதை குழந்தைகள் மிகவும் ரசித்தனர்.அப்போது சாலையின் ஓரத்தில் சாரல் இலைகள்வளர்ந்திருப்பதைப் பார்த்தனர்.உடனே அதைப் பறிக்கத் தொடங்கினர்.பூனைக்குட்டியை அவர்கள்மறந்தே போய் விட்டனர்.
திடீரென யாரோ “இங்கே வா இங்கே வா!” என்று சத்தமிடும்குரல் அவர்களுக்குக் கேட்டது.அவர்கள் ஒரு வேட்டைக்காரன் குதிரை மீது வருவதைப் பார்த்தனர்.அவனுக்கு முன்னால் ஓடி வந்த அவனுடைய இரண்டு நாய்களும் பூனைக்குட்டியைப் பார்த்து விட்டன.உடனேஅதன் மீது பாய்வதற்குத் தயாராகின.என்ன நடந்தது தெரியுமா? ஓடிஒளிவதற்குப் பதிலாக அந்தப்பூனைக்குட்டிநாய்களை எதிர்த்து நின்று உறுமிக் கொண்டிருந்தது.நாய்களைப் பார்த்த காட்யா அலறியடித்துக்கொண்டுஓடி விட்டாள்.ஆனால் வாஸ்யா பூனைக்குட்டியை நோக்கி வேகவேகமாக ஓடினான்.நாய்கள் நெருங்கியஅதே சமயத்தில் அவனும் நெருங்கி விட்டான்.நாய்கள் பாய்ந்து பூனைக்குட்டியைக் கவ்வித்தூக்குகிற கணத்தில் வாஸ்யா பாய்ந்து பூனைக்குட்டியின் மீது விழுந்து தன் உடம்பால் அதைமூடிக் கொண்டான்.அதற்குள் விரைந்து வந்த வேட்டைக்காரன் நாய்களைத் தூர விரட்டினான்
வாஸ்யா பூனைக்குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப்போனான் அதற்குப் பிறகு பூனைக்குட்டியை ஒருபோதும் சாலைப் பக்கம் கொண்டு வரவேயில்லை.

No comments:

Post a Comment