Thursday 12 April 2012

ஈதல்

 Peacock_Feather_by_Aliace
 

தற்செயலாய் என்னைப்

பார்த்ததந்த மயிலிறகு

நீலக்கண்களை சுபாவமாய்

மூடித்திறந்தபடி

செல்லமகளின் பாடப்புத்தகத்தில்

செல்லமாய் இருந்தபடி

என் காலம் பிழைத்தது

கனவாய் வந்தாள் மகள்

எந்த மயிலிடம் பெற்றாய் கண்ணே!

புன்னகை மாறாமல்

மழலைஇசையாய்

நீ எந்த மயிலிடம் பெற்றாயோ

அந்த மயில்தான் ஈந்ததென்றாள்

ஆடிக் கொண்டிருந்தது காலம்

குழந்தையாய்.

No comments:

Post a Comment